Friday, April 4, 2014

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் விண்ணில் இன்று ஏவப்படுகிறது!


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி–சி24 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–2 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி–சி24 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 58½ மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 2–ந்தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது.

No comments: